ஒரு முதலாளியின் லாபத்தை விட ஓராயிரம் குடும்பங்களின் வாழ்வுரிமை மேலானது !


விளைநிலங்களை அழித்து, கடல் வளத்தை கெடுத்து சுற்றுச் சூழலை மாசுபடுத்தி, கிராமப்புற மக்களை சாகடித்து பெருமுதலாளிகளை வாழவைக்கும் பெருந்தோட்டம் சிந்தியா பவர் பிளாண்ட் உள்ளிட்ட நாகை மாவட்டத்தின் அனைத்து தனியார் அனல் மின்நிலையங்களையும்

நிரந்தரமாகத் தடை செய்யக்கோரி


தொடர் முழக்கப்போராட்டம்


மத்திய ; மாநில அரசுகளே !
Ø 
தமிழகத்தின் நெற்களஞ்சியமான நாகை மாவட்டத்தின் விளைநிலங்களை அழித்து விவசாயிகள், விவசாயத்தொழிலாளர்கள், மீனவர்கள் வாழ்வாதாரத்தை கெடுக்கும் மாவட்டத்தின் அனைத்து அனல் மின் நிலையங்களையும் தடை செய் !

Ø தனியார் கம்பெனிகள் இதுவரை அபகரித்துள்ள பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களை கைப்பற்றி மேற்கு வங்கத்தைப்போல் நில மேம்பாடு மற்றும்மறு சீரமைப்புத் திட்டத்தின் கீழ் ஏழை விவாசாயிகளுக்கு பிரித்துக்கொடு !

Ø நாட்டின் மின்சாரத் தேவைக்கு பல்லாயிரம் கோடிகளை செலவிட்டு கிடப்பில் போட்டுள்ள ஜெயங்கொண்டம் அரசு மின் உற்பத்தித்  திட்டத்தை உடனே தொடங்குமேலும் சுற்றுச்சூழலைப் பாதிக்காத, விவசாயத்தை அழிக்காத காற்றாலை, கடலலை, சூரிய சக்தி மற்றும் புவி வெப்ப சக்தி மூலம் மின் உற்பத்தி செய்ய வழி செய் !

Ø நாகை மாவட்டத்தின் நீண்ட கடற்கரையை பாழ்படுத்தி மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை கெடுத்து சுற்றுச் சூழலை மாசுபடுத்தும் அனைத்து அனல் மின்நிலையங்களுக்கும் அனுமதி வழங்காதே !


Ø நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தில் 10 ஆயிரம் கோடி ஊழல் செய்து அரசு மின் நிறுவனங்களை நஷ்டப்படுத்தி தனியார் மின் நிறுவனங்கள் கொள்ளையிட ஊக்கமளிக்கும் என்.எல்.சி. சேர்மன் ஊழல் அன்சாரியை கைது செய்து ஊழல் சொத்துக்களை பறிமுதல் செய் !

அணு ஆபத்து வேண்டாம், மக்களின் வாழ்வே பெரிதென்று கூடங்குளம் அணு உலைகெதிராகப் போராடும் இடிந்தகரை மக்களின் கோரிக்கையை நிறைவேற்று.

உழைக்கும் மக்களே !
    
நமது வாழ்வாதாரங்கள அழிக்க வரும் இந்நாட்டு, பன்னாட்டு பெருமுதலாளிகளுக்கு பின்புலமாக இருக்கும் தனியார் மயம், உலகமயம் என்ற தேசவிரோத கொள்கைகளை அமுல்படுத்தும் காங்கிரஸ் மற்றும் கழக ஆட்சியாளர்களுக்கு எதிராக..

மாபெரும் அரசியல் சக்தியாக அணிதிரள்வோம் !

வாழ்வுரிமைக்கான வீரம்செறிந்த நந்திகிராம், சிங்கூர் மக்களின் போராட்ட வெற்றியை நமது மண்ணிலும் நடத்திக் காட்டுவோம்.


நாள் : 02-01-2012 திங்கள் காலை 11-00 மணி
இடம்: சீர்காழி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு 




தலைமை:

தோழர் என். குணசேகரன் அவர்கள்
மாவட்ட செயலாளர் CPI ML (மக்கள் விடுதலை)
அனல்மின் நிலைய எதிர்ப்புக் கூட்டியக்க அமைப்பாளர்

விளக்கவுரை:
தோழர் தங்க. தமிழ்வேலன் அவர்கள்
மையக்குழு உறுப்பினர் CPI ML (மக்கள் விடுதலை)
(தமிழக இளைஞர் கழக மாநில அமைப்பாளர்)

தோழர் அரங்க. குணசேகரன் அவர்கள்
மாநிலதலைவர், தமிழக மக்கள் புரட்சிக் கழகம்
அனல்மின் நிலைய எதிர்ப்புக் கூட்டியக்கம்

தோழர் M. செல்வராஜ் அவர்கள்
NLC தொழிற்சங்க தலைவர்
கடலூர் மாவட்ட செயலாளர் CPI ML (மக்கள் விடுதலை)

தோழர் S. சுந்தர் ஒருங்கிணைப்பாளர்
அனல்மின் நிலைய எதிர்ப்புக் கூட்டியக்கம்

தோழர் R. அருணாச்சலம் அவர்கள்
தஞ்சை மாவட்ட அமைப்பாளர்   CPI ML  (மக்கள் விடுதலை)

தோழர் A. லூர்துசாமி அவர்கள்
மயிலாடுதுறை வட்ட செயலாளர் CPI ML (மக்கள் விடுதலை)

தோழர் சுப்பு. மகேஷ் அவர்கள் தமிழர் உரிமை இயக்கம்
அனல்மின் நிலைய எதிர்ப்புக் கூட்டியக்க இணை அமைப்பாளர்

தோழர் U. ராஜு அவர்கள்
தலித் விடுதலைக்கான மாற்று முன்னணி

திரு N. சிவப்பிரகாசம்.B.Sc.,, அவர்கள்
ஊராட்சி மன்ற தலைவர், திருவெண்காடு.

வழக்கறிஞர் சங்கர் அவர்கள் ஒருங்கிணைப்பாளர்,
கிழக்குக் கடற்கரை மக்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு.

தோழர் பெரியார் செல்வம் அவர்கள்
தமிழ் இளைஞர் பேரவை மாவட்ட தலைவர்

தோழர் K, விஜயபாலன் அவர்கள்
தமிழக மீனவர்கள் முன்னணி, தரங்கம்பாடி.

தோழர் நட்சத்திரராஜ் சமூக ஆர்வலர்.

தோழர் அன்பு. ராசப்பா அவர்கள்
பு.க.க.இ. மன்றம், மாவட்ட செயலாளர்

தோழர் மதிவாணன் சமூக ஆர்வலர், புளியந்துறை.

தோழர் தட்சிணாமூர்த்தி அவர்கள்
செம்பை ஒன்றிய அமைப்பாளர் CPI  (மக்கள் விடுதலை)

தோழர் M.குணசேகரன் அவர்கள்
மீனவர்கள் வாழ்வுரிமை பாதுகாப்பு பேரவை, வாணகிரி.

தோழர் இராமலிங்கம் ஆசிரியர் அவர்கள்
புரட்சியாளர் அம்பேத்கர் அரசு பணியாளர் அமைப்பு

திரு நடேச நாட்டார் அவர்கள் மடத்துக்குப்பம்

தோழர் இ. பாரதி அவர்கள் துணைத் தலைவர்
அம்பேத்கர் பொருளாதார மேம்பாட்டு சங்கம்

தோழர் ப. பெருமாள் அவர்கள் மா. தலைவர்.
புரட்சியாளர் அம்பேத்கர் அரசு பணியாளர் அமைப்பு

நிறைவுரை:
தோழர். மீ. த. பாண்டியன் அவர்கள்
மாநில செயலாளர் CPI ML (மக்கள் விடுதலை)

நன்றியுரை:
தோழர் P. கருணாநிதி அவர்கள் CPI ML(மக்கள் விடுதலை)
ஊ. ம. உறுப்பினர், பெருந்தோட்டம்.

  CPI ML (மக்கள் விடுதலை)
காவிரி டெல்டா மண்டல கமிட்டி.

தொடர்புக்கு:  9524584767

விபத்தில் இறந்த தொழிலாளர்களின் மனைவியருக்கு நிரந்தர பணி தர என்.எல்.சி. நிறுவனம் ஒப்புதல் ! வேலைநிறுத்தம் வாபஸ் !











இரண்டாம் அனல்மின்நிலையத்திற்கு பணிக்குசென்ற இரண்டு தொழிலாளர்கள் சாலைவிபத்தில் உயிரிழந்தனர். அவர்களின் வாரிசுகளுக்கு நிர்வாகம் வேலைவாய்ப்பு தரமறுத்ததையடுத்து இரண்டாம் அனல் மின்நிலையத்தில் நேற்று இரவுப்பணியிலிருந்து முதல் பணி இறுதிவரை வேலைநிறுத்தம் நடைபெற்றது.

என்.எல்.சி. நிர்வாக அலுவலகத்தில் காலை 10.00 மணிக்கு அங்கீகரிகப்பட்ட சங்கங்களுக்கும் மனிதவளத்துறை இயக்குனருக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இறுதியாக தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனரோடு நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இறந்த தொழிலாளர்களின் மனைவியருக்கு 2012 ஜனவரிக்குள் நிரந்தர பணி தருவதாக நிர்வாகம் ஏற்றுக்கொன்டுள்ளது.




















மேற்படி தகவலை பகல் 1.45 மணியளவில் என்.எல்.சி. பொதுமருத்துவ மனையில் நடைபெற்ற கூட்டத்தில் தொ.மு.ச பொதுச்செயலாளர் தெரிவித்தார். ஒப்பந்த நகலை தொ.மு.ச. அலுவலகச்செயலாளர் ஶ்ரீதர் படித்தார். அதில் என்.எல்.சி. சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு வேலைவாய்ப்பு தருவதாக சொல்லப்பட்டுள்ளது. (12 / 3 ஒப்பந்தம் உட்பட இறந்தவர்களின் வாரிசுகளுக்கு வேலைதருவதாக நிர்வாகம் ஏற்றுகொண்ட  இதுபோன்ற பல ஒப்பந்தங்கள் நிர்வாகத்தால் கிடப்பில் போடப்பட்டுள்ளன. அவை போல இதுவும் ஒன்றா ? என்பது 2012 ஜனவரியில்தான் தெரியும்.)  கூட்டத்தில், உயிரழந்த தொழிலாளர்களுக்கு 2 நிமிடம்  மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இறுதியாக போராட்டத்திற்கு ஆதரவளித்த அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் நன்றி தெரிவித்த தொ.மு.ச தலைவர் திருமாவளவன் இரண்டாம் பணியிலிருந்து வேலைக்கு செல்லுமாறு இரண்டாம் அனல்மின்நிலையத்தொழிலாளர்களை கேட்டுக்கொண்டார். முன்னதாக பா.தொ.ச பொதுச்செயலாளர் திலகர் தலைமை தாங்கினார். கூட்டத்தில் ஒரு தொழிலாளி பிக்-அப் பஸ் என்னாயிற்று என்று கேட்டதற்கு ஜனவரியில் விட பேசி ஏற்பாடு செய்யபடும் என மொட்டையாக பதிலளித்தார் தொ.மு.ச பொதுச்செயலாளர் ராஜவன்னியன். இக்கூட்டத்தில் நமது சங்க பொதுச்செயலாளரும் கலந்துகொண்டார்.     

இரண்டாம் அனல்மின்நிலையத்திற்கு பணிக்குசென்ற இரண்டு தொழிலாளர்கள் சாலைவிபத்தில் உயிரிழப்பு ! என்.எல்.சி. நிர்வாகம் நிவாரணம் தரமறுப்பு ! சாலைமறியல்! வேலைநிறுத்தம்!!



  15.12.20011 பகல் 1.45 மணியளவில், இரண்டாம் அனல் மின்நிலையத்தில் பணியாற்றிய சீனியர் டெக்னீஷியன்கள், தோழர்கள் எஸ். ஶ்ரீதரன் மற்றும் டி.எம். மோகன் குமார் இருவரும் இரு சக்கர வாகனத்தில் இரண்டாம் அனல் மின் நிலையம் நோக்கி இரண்டாம் பணிக்கு உரஆலை அருகே சென்றுகொண்டிருந்தபோது பின்னால் வந்த மினி வேன் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தொழிற்சங்க தலைவர்களுக்கும் நிர்வாகத் தரப்பு அதிகாரிகளுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் தொழிற்சங்க தலைவர்கள் வைத்த இரண்டு கோரிக்கைகளான             
1. உயிரழந்த தொழிலாளர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு என்.எல்.சி. யில்
வேலை வாய்ப்பு
2.நிறுத்தப்பட்ட பிக்-அப் பேருந்துகளை மீண்டும் இயக்கவேண்டும்
ஆகியவற்றை நிர்வாகம் ஏற்க மறுத்துவிட்டதால் உடல்களை பிணவறைக்கு அனுப்ப மறுத்த தொழிலாளர்கள் உடல்களை குளிர்பதன கண்ணாடி பெட்டிகளில் மருத்துவ மனையிலேயே வைக்கப்பட்டு கூட்டம் கூட்டமாக தொழிலாளர்கள் பார்வையிட்டுவருகின்றனர். மருத்துவமனை எதிரில் சாலைமறியல் செய்யப்பட்டு பத்துக்கும் மேற்பட்ட என்.எல்.சி பேருந்துகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன. இரண்டாம் அனல் மின்நிலையத் தொழிலாளர்கள் இரவுப்பணியிலிருந்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நமது சங்கம், உயிரழந்த இரண்டு தோழர்களின் குடும்பத்தாருக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது. என்.எல்.சி. நிர்வாகம் தனது பிடிவாதத்தை கைவிட்டு மேற்படி இரண்டு கோரிக்கைகளையும்  உடனடியாக நிறைவேற்ற வேண்டுமென கேட்டுக்கொள்கிறது. 

நமது ஜனநாயக தொழிற்சங்க மையத்தின்(DTUC) மாநில தலைவர் தோழர் ஜே.சிதம்பரநாதன் நெய்வேலி வருகை



நமது ஜனநாயக தொழிற்சங்க மையத்தின்(DTUC) மாநில தலைவர் தோழர் ஜே.சிதம்பரநாதன் 26-11-2011 அன்று நெய்வேலிக்கு வருகைதந்தார். நமது சங்கத்தலைவர் தோழர் எம்.செல்வராஜ் மற்றும் சங்கப்பொருப்பாளர்களோடு உரையாடினார். ஊழலுக்கு எதிராகவும், தொழிலாளர்களுக்கு எதிரான அடக்குமுறைக்கு எதிராகவும் பல்வேறு பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கு அஞ்சாமல் போராடிவரும் சங்கப்பொருப்பாளர்களை பாராட்டினார். நமது சங்கத்தின் நடவடிக்கைகளுக்கு நன்கொடையும் நல்லாதரவும் வழங்கி முன்னுதாரணமாகத் திகழும் என்.எல்.சி. பணியாளர்களுக்கு தனது புரட்சிகர வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார்.  

நமது சங்கப்பொருப்பாளர்கள் மீது என்.எல்.சி. நிர்வாகத்தின் தொழிலாளர்விரோத, பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கு எதிராக, நமது சங்கம் சார்பாக மத்திய உதவி தொழிலாளர் ஆணையாளர் அவர்கள் முன் எழுப்பப்பட்ட தொழில் தகராறு மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் பரிசீலனைக்கு அனுப்பப்படுகிறது


நமது சங்கப்பொருப்பாளர்கள் மீது என்.எல்.சி. நிர்வாகத்தின் தொழிலாளர்விரோத, பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கு எதிராக, நமது சங்கம் சார்பாக 01.06.2011 அன்று மத்திய உதவி தொழிலாளர் ஆணையாளர் திரு.பி.சிவராஜன் அவர்கள் முன் தொழில் தகராறு எழுப்பப்பட்டது.(விரிவான அறிக்கையை 09.11.2011ல் வெளியிடப்பட்ட முந்திய செய்தியில் காண்க).  சமரச பேச்சுவார்த்தை கடந்த 6 மாதங்களாக சென்னை, புதுச்சேரி மற்றும் இறுதியாக 23.11.2011 அன்று நெய்வேலியிலும்  நடைபெற்றது. நமது சங்கத்தின் சார்பாக தலைவர்,பொதுச்செயலாளர்,செயலாளர் தோழர் பி.ராமலிங்கம் மற்றும் துணைத்தலைவர் தோழர் என்.கென்னடி ஆகியோரும் என்.எல்.சி. நிர்வாகத்தின் சார்பாக மனிதவளத்துறை/ தொழிலுறவுத்துறை பொதுமேலாளர் திரு.கே.பெரியசாமி , துணைத் தலைமை மேலாளர் திரு. .எஸ். அறிவு மற்றும் துணைமேலாளர் திரு.கார்த்திக் ஆகியோரும் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டனர்.  மத்திய உதவி தொழிலாளர் ஆணையாளர் அவர்களும் என்.எல்.சியின் மனிதவள இயக்குனர் அவர்களுக்கு கடிதம் எழுதினார்; நேரில் சந்தித்துப்பேசினார். முடிவு எதுவும் எட்டப்படாததால், மேற்படி தொழில் தகராறு மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் பரிசீலனைக்கு அனுப்பப்படுகிறது.

புதுச்சேரியில் மத்திய உதவி தொழிலாளர் ஆணையாளர் பதவியேற்பு

                                                                           
ஒவ்வொரு முறையும் சமரச பேச்சுவார்த்தைக்கு சென்னை சென்றுவர சிரமமாகவிருப்பதால் மத்திய தொழிலாளர் ஆணையாளர் அலுவலக கிளையை நெய்வேலியில் துவங்க வேண்டுமென நீண்டகாலமாக நமது சங்கம் கோரிவந்தது. நமது கோரிக்கை நிறைவேறும்வகையில், மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்,  புதுச்சேரியில் மத்திய உதவி தொழிலாளர் ஆணையாளர் அலுவலகம் திறக்கஉத்தரவிட்டுள்ளது.
அதன் அடிப்படையில் ஏற்கனவே சென்னை சாஸ்திரி பவன் அலுவலகத்தில் நெய்வேலி உள்ளிட்ட, புதுச்சேரி மற்றும் திருச்சி  பகுதிகளின் மத்திய உதவி தொழிலாளர் ஆணையாளராக பணியாற்றிய திரு.பி. சிவராஜன் அவர்கள் புதுச்சேரி மத்திய தொழிலாளர் அமலாக்க அதிகாரி அலுவலகத்தில்,  16.11.2011 அன்று நெய்வேலி உள்ளிட்ட, புதுச்சேரி மற்றும் திருச்சி பகுதிகளின் மத்திய உதவி தொழிலாளர் ஆணையாளராக பொறுப்பேற்றுக் கொண்டார்.   அவரை, சமரசபேச்சுவார்த்தைக்கு சென்றிருந்த      நமது பொதுச்செயலாளர் தோழர். இரா.இரவிச்சந்திரன் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். 

எ.ன்.எல்.சியின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் திரு.ஏ.ஆர். அன்சாரியை சி.பி.ஐ விசாரிக்க பெறப்பட்ட தடையை நீக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு!


என்.எல்.சியின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் திரு..ஆர். அன்சாரி என்.எல். சியின் வரவு-செலவு அறிக்கையில் ரூ.10,000 கோடி முறைகேடு செய்துள்ளதாக  சென்னை சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் நமது சங்க தலைவர் தோழர் செல்வராஜ் தொடுத்த வழக்கில், திரு..ஆர். அன்சாரியை சி.பி.ஐ விசாரிக்க தரப்பட்ட உத்தரவுக்கு, சென்னை உயர்நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்றுள்ளார் திரு. .ஆர். அன்சாரி. அத்தடையை நீக்கக்கோரி நமது சங்க தலைவர் தோழர் செல்வராஜ் தொடுத்த வழக்கு (Cr.MP.2/2011 in Cr. Revision 917/2011)  சென்னை உயர்நீதிமன்ற முதன்மை அமர்வில் விரைவில் விசாரிக்கப்படவிருக்கிறது.

இரண்டாம் சுரங்க தலைமை பொதுமேலாளர் அவர்களுக்கு நமது பொதுச்செயலாளரின் வேண்டுகோள்


நமது சங்க பொதுச்செயலாளர் அவர்கள், இரண்டாம் சுரங்கம் மற்றும் விரிவாக்கத்தின் தலைமை பொதுமேலாளர் அவர்களுக்கு, 19.10.2011 தேதியிட்ட கடிதத்தின் மூலம் விடுத்துள்ள வேண்டுகோளில், “பி” பாய்ண்ட் பாலம் முதல் மந்தாரக்குப்பம் வரையிலான சாலையில் கடந்த ஒரு மாத காலமாக  இரவுநேரங்களில் விளக்குகள் எரியாததால், இரண்டாம் சுரங்கம் மற்றும் விரிவாக்கத்திற்கு, பணிக்கு வரும் பணியாளர்களுக்கு விபத்து நேரிடும் ஆபத்தான சூழல் நிலவுவதால் உடனடியாக இரவு நேரங்களில் மேற்படி விளக்குகள் எரிவதற்கு ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.  

18.10.2011 நிர்வாகக்குழுக்கூட்ட முடிவுகள்


18.10.2011ல் வடகுத்தில் சங்கத்தின் நிர்வாகக்குழுக்கூட்டம்(20) நடைபெற்றது.  சங்கத்தலைவர் தோழர். மு.செல்வராஜ் தலைமை தாங்கினார். நீண்ட விவாதத்திற்கு பிறகு கீழ்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.
1.  அதிகாரிகளுக்கு இணையாக லாபத்தில் பங்கு கோரும் இன்சென்டிவ், போனஸ் உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகள் மீது தொடரியக்கம் நடத்துவது.

2. சங்கத்தலைவர் பணிநீக்கம் உள்ளிட்ட நிர்வாகிகள் மீதான  என்.எல்.சி. நிர்வாகத்தின் பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கு எதிராக சட்டரீதியான தீர்வுகாண்பது.

                3. ஊழல்களுக்கெதிரான நீதிமன்ற நடவடிக்கைகளை          விரைவுபடுத்துவது.

                கூட்ட இறுதியில் சங்க பொருளாளர் நன்றி கூறினார்.

என்.எல்.சி. அதிபர் மற்றும் நிர்வாக இயக்குநர் திரு.ஏ.ஆர். அன்சாரி அவர்கள்மீது சி.பி.அய். வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டுமென சி.பி.அய். சிறப்பு நீதிமன்றம் உத்தரவு.


                              
என்.எல்.சி. அதிபர் மற்றும் நிர்வாக இயக்குநர் திரு.ஏ.ஆர். அன்சாரி அவர்கள் ரூ.10000 கோடி ஊழல் செய்திருப்பதாகவும் அவரை சி.பி.அய். விசாரிக்க உத்தரவிடவேண்டுமெனவும் நமது சங்கத்தலைவர் தோழர். எம். செல்வராஜ் அவர்கள்  சென்னை சி.பி.அய். சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி திரு. எல். யூசுப் அலி அவர்கள், என்.எல்.சி. அதிபர் மற்றும் நிர்வாக இயக்குநர் திரு.ஏ.ஆர். அன்சாரி அவர்கள்மீது சி.பி.அய். வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டுமென 04.07.2011 அன்று உத்தரவிட்டார். 
    


என்.எல்.சி. அதிபர் மற்றும் நிர்வாக இயக்குநர் திரு.ஏ.ஆர். அன்சாரிக்கு எதிராக நமது ஜனநாயக தொழிற்சங்க மையத்தின் (DTUC) மாநில தலைவர் தோழர். ஜே. சிதம்பரநாதன் உச்சநீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கின் விவரம்

                                                                 
என்.எல்.சி. அதிபர் மற்றும் நிர்வாக இயக்குநர் திரு.ஏ.ஆர். அன்சாரி அவர்கள் ரூ.10000 கோடி ஊழல் செய்திருப்பதாகவும் அவரை சி.பி.அய். விசாரிக்க உத்தரவிடவேண்டுமெனவும் நமது ஜனநாயக  தொழிற்சங்க மையத்தின் (DTUC) மாநில தலைவர் தோழர். ஜே. சிதம்பரநாதன் தொடுத்த வழக்கு ( Writ Petition (Criminal) No.98 0f 2011) உச்சநீதிமன்றத்தில்13.05.2011ல் விசாரிக்கப்பட்டு, சென்னை உயர்நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரிக்கப்பட உத்தரவிடப்பட்டது.   சென்னை உயர்நீதிமன்றத்தின் முதல் பெஞ்சில் இவ்வழக்கு (W.P. No.13040/2011) நிலுவையில் உள்ளது.
ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் ஒன்றிணைவோம். மீண்டும் வெல்வோம்!!


என் எல் சி ஒர்க்கர்ஸ் சாலிடாரிட்டி யூனியனின் வேண்டுகோள் !

தொழிலாளர்களின் உரிமைகளை மீட்டெடுக்கவும் ஊழலுக்கு எதிராகவும்  நாங்கள் நடத்தும் சட்டரீதியான போராட்டங்களுக்கு நன்கொடை அளிக்கவும் நேரடியான போராட்டங்களுக்கு ஆதரவளிக்கவும் பங்குபெறவும் வேண்டுகிறோம்