தோழர். மு. செல்வராஜ் நினைவேந்தல்


தோழர். மு. செல்வராஜ் அவர்களின் நினைவேந்தல் கூட்டம் 10.07.2012 மாலை 5.00 மணியளவில் நெய்வேலி, வடகுத்து பவுனாம்பாள் நகரில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு இ...மா-லெ மக்கள் விடுதலையின் மாநில செயலாளர் தோழர். மீ.. பாண்டியன் தலைமை தாங்கினார். மாநிலக்குழு உறுப்பினர் தோழர். குணசேகரன் தோழரின் படத்தை திறந்து வைத்தார். நெய்வேலி ஜனநாயக தொழிற்சங்க மையத்தின் பொறுப்பாளர்கள், நண்பர்கள், கட்சியின் கடலூர், சேலம், திருவள்ளூர், தஞ்சை மாவட்ட செயலாளர்கள், இளைஞர் இயக்க மாநில பொறுப்பாளர்  தோழர். தங்க. தமிழ்வேலன், கடலூர் மாவட்ட குழு உறுப்பினர்கள் தோழர். ராஜா, தோழர்.குப்புசாமி, .தொ.மை. மாநில செயலாளர் தோழர். சுகுந்தன் ஆகியோர் நினைவேந்தல் உரையாற்றினர். கட்சியின் கட்டுப்பாட்டு குழு தலைவர். தோழர். அண்ணாதுரை மறைந்த தோழர் செல்வராஜின் துணைவியார் திருமதி. நற்குணபூசனி அவர்களிடம் கட்சியின் சார்பாக குடும்ப நிதி ரூ.1 லட்சத்தை வழங்கினார். திரளான கட்சி உறுப்பினர்களும், தொழிற்சங்க பொறுப்பாளர்களும், நண்பர்களும் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.


நினைவேந்தல்


இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) மக்கள் விடுதலை சார்பாக,  தோழர். மு. செல்வராஜ் அவர்களின் நினைவேந்தல்  10.07.2012, செவ்வாய் மாலை 3.00 மணியளவில் பவுனாம்பாள் நகர், வடக்குத்து, நெய்வேலியில் நடைபெறுகிறது.


வீர வணக்கம்


இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்- லெனினிஸ்ட்) மக்கள் விடுதலையின் கடலூர் மாவட்ட செயலாளரும், ஜனநாயக தொழிற்சங்க மையம் ( DTUC),  நெய்வேலி, தலைவரும், நெய்வேலி தொழிலாளர் வர்க்கத்தின் மிகப்பெரிய போராளியுமான
தோழர். IPF M. செல்வராஜ் அவர்கள்
25.06.2012, திங்கள் கிழமை, காலை 7.45 மணியளவில் சென்னை மலர் மருத்துவமனையில் அகால மரணமடைந்தார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
தோழரின் இறுதி ஊர்வலம் 26.06.2012, செவ்வாய் கிழமை, மாலை 3.00 மணியளவில் டி-3 , இத்தாலியன் சாலை, வட்டம்-27, நெய்வேலி டவுன்ஷிப்பிலிருந்து புறப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
இவண்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்- லெனினிஸ்ட்) மக்கள் விடுதலை, கடலூர் மாவட்டம்
 ஜனநாயக தொழிற்சங்க மையம் ( DTUC),  நெய்வேலி.