ஏஐடியுசி பொதுச்செயலாளர் குருதாஸ் தாஸ்குப்தா, எம்.பி., தலைமையில் நாளை (16.05.2012) ஒப்பந்த தொழிலாளர்கள் எச்சரிக்கை பேரணி, பொதுக்கூட்டம்

என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் 14,000 பேர், தங்களுடைய ஊதிய உயர்வு, சமவேலைக்கு சமஊதியம், பணிநிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக கடந்த 25 நாட்களாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.உண்ணாவிரதம், சாலை, ரயில் மறியல் போராட்டங்களை நடத்தினர். பல சுற்று முத்தரப்பு பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிவடைந்தது. நாளை 26வது நாள் ஏஐடியுசி பொதுச்செயலாளர் குருதாஸ் தாஸ்குப்தா, எம்.பி., தலைமையில் ஒப்பந்த தொழிலாளர்கள் எச்சரிக்கை பேரணி,  நெய்வேலி மத்திய  பேருந்து நிலையம் அருகில் பொதுக்கூட்டம் ஆகியவற்றை நடத்துகின்றனர்.

13,000 என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டம் வெல்க!


ஊதிய உயர்வு, சமவேலைக்கு சமஊதியம், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக கடந்த 18 நாட்களாக போராடிவரும் 13,000 என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்களின் வேலைநிறுத்த போராட்டம் வெற்றியடைய வாழ்த்துகிறோம். உண்ணாவிரதம், சாலை மறியல், ரயில் மறியல் என பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு உறுதியோடு போராடிவரும் தொழிலாளர்களுக்கு எங்களுடைய ஆதரவை தெரிவித்துக்கொள்கிறோம்.  உடனடியாக மத்திய அரசு தலையிட்டு அவர்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

நமது சங்க பொறுப்பாளர்களை என்.எல்.சி. நிர்வாகம் பணியிட மாற்றம் செய்தது சரியா? என 3 மாதங்களுக்குள் விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டுமென மத்திய அரசு, சென்னை, மத்திய அரசு தொழிலாளர் தீர்ப்பாயம் மற்றும் தொழிலாளர் நீதிமன்றத்திற்கு உத்திரவிட்டுள்ளது.


இரண்டாம் அனல் மின் நிலையத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த நமது சங்கப் பொறுப்பாளர்கள் எல். ராஜேந்திரன், துணைத்தலைவர், இரா. இரவிச்சந்திரன், பொதுச்செயலாளர் மற்றும் பி. ராமலிங்கம், செயலாளர் ஆகியோரை முறையே சுரங்கம்-1, சுரங்கம்-2 மற்றும் சுரங்கம்-1ஏ ஆகிய பகுதிகளுக்கு பணியிட மாற்றம் செய்து என்.எல்.சி. நிர்வாகம் 26.05.2011 அன்று உத்திரவிட்டது.
இந்நடவடிக்கையானது, தொழில் தகராறு சட்டம், 1947, அட்டவணை-5 ன் கீழ் தொழிற்சங்க விரோத நடவடிக்கையாகும் என குறிப்பிட்டு சென்னை, மண்டல தொழிலாளர் ஆணையாளர் (மத்திய) முன்பு நமது சங்கம் சார்பாக தொழில் தகராறை 01.06.2011ல் எழுப்பினோம்.
அது சம்பந்தமான சமரச பேச்சுவார்த்தை, நமது சங்கத்திற்கும் என்.எல்.சி. நிர்வாகத்திற்கும் இடையில்  சென்னை, தொழிலாளர் துணை ஆணையாளர் (மத்திய) முன்பு 26.05.2011ல் தொடங்கி பல்வேறு நாட்களில் நடைபெற்று இறுதியாக 23.11.2011ல் நடைபெற்ற பேச்சுவார்த்தை முறிவடைந்தது. முறிவறிக்கை மத்திய அரசுக்கு 12.12.2011ல் அனுப்பிவைக்கப்பட்டது.
அம்முறிவறிக்கையை பரிசீலித்த மத்திய அரசு, தொழிலாளர் அமைச்சகம், “ துணைத்தலைவர், பொதுச்செயலாளர் மற்றும் செயலாளர் தொழிற்சங்கப் பொறுப்பு வகிக்கும் திருவாளர்கள் எல்.ராஜேந்திரன், ஆர். ரவிச்சந்திரன் மற்றும் பி.ராமலிங்கம் ஆகியோரை பணியிட மாற்றம் செய்துள்ள, நிர்வாகத்தின் நடவடிக்கை நியாயமானதுதானா? சம்மந்தபட்ட பணியாளர்களுக்கு என்ன நிவாரணம் வழங்கப்பட வேண்டும்” என விசாரித்து 3 மாதங்களுக்குள் தீர்ப்பு வழங்கிடுமாறு சென்னை, மத்திய அரசு தொழிலாளர் தீர்ப்பாயம் மற்றும் தொழிலாளர் நீதிமன்றத்திற்கு 19.04.2012 அன்று உத்திரவிட்டுள்ளது.      

THE MINES ACT, 1952


1.      First Indian Mines Act was passed in the year  a.1947  b.1950  c.1923  d.1952

2.      The Mines Act was passed in the year a. 1947  b.1950  c.1923  d.1952

3.      Chief  Inspector of Mines and Inspectors of Mines are appointed by  a.State Government b. Central Government  c.Owner of M ines  d.Agent of Mines

4.      According to Mines Act cool and whole some drinking water shall be supplied to every person, at least  a. 1 litre  b. 2 litres  c. 3 litres  d. 8 litres

5.      No person shall be allowed to work in a Mine for not more than  a. 7 days and 56 hours in a week  b. 6 days  and 48  hours in a week  c. 5 days and 45  hours in a week  d. 6 days and 42 hours in a week

6.      A canteen shall be provided in a Mine, where number of persons working is  a. 100 or more  b.150 or more  c. 200 or more   d. 250 or more

7.      There shall be one Welfare Officer in a Mine, where the number of persons employed is  a. 100 or more  b. 200 or more  c.500 or more  d. 1000  or more

8.      For every 2000 employee in a Mine, the number of Welfare Officer shall be  a. 1  b. 2  c.3  d. 4

9.      Any person who is the immediate proprietor or lessee or the occupier of the mine is called  a. Owner  b. Agent  c. Manager  d. Operator

10.  Any person,  who acting or purporting to act on behalf of the owner , takes part in the management, control, supervision or direction  of the Mine is called  a. Owner  b. Agent  c. Manager  d. operator

மே நாள் வரலாறு


மே நாள்
மே தினம் எனப்படும் உலகத் தொழிலாளர் தினம் ஆண்டுதோறும் மே முதலாம் திகதி (மே 1) உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படுவதாகும்.
[தொகு]தொழிலாளர் போராட்டம்
18ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் - 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் வேகமாக வளர்ச்சியடைந்த நாடுகளில் தொழிலாளிகள் பலரும் நாளொன்றுக்கு 12 முதல் 18 மணி நேரக் கட்டாய வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டனர். இதற்கெதிரான குரல்களும் பல்வேறு நாடுகளில் ஆங்காங்கே எழத் துவங்கியது. இதில் குறிப்பிடத்தக்கது இங்கிலாந்தில் தோன்றிய சாசன இயக்கம் (chartists). சாசன இயக்கம் 6 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து தொடர் இயக்கங்களை நடத்தியது. அதில் குறிப்பிடத்தக்கது 10 மணி நேர வேலை கோரிக்கை.
[தொகு]பிரான்சில் தொழிலாளர் இயக்கம்
1830களில் பிரான்சில் நெசவுத் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளிகள் தினமும் கட்டாயமாக 15 மணி நேரம் உழைக்க வேண்டி இருந்தனர். இதை எதிர்த்து அவர்கள் பெரும் வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தினர். 1834இல் ஜனநாயகம் அல்லது மரணம் என்ற கோஷத்தை முன்வைத்து பெரும் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இவையனைஇத்தும் தோல்வியில் முடிவடைந்தன.
[தொகு]ஆஸ்திரேலியாவில் தொழிலாளர் இயக்கம்
ஆஸ்திரேலியாவில் மெல்பேர்னில் கட்டிடத் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழி லாளிகள் உலகிலேயே முதன் முதலாக 8 மணி நேர வேலை கோரிக் கையை முன்வைத்து 1856இல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு, வெற்றியும் பெற்றனர். இது தொழிலாளி வர்க்க போராட்டத்தின் மைல் கல்லாக அமைந்தது.
[தொகு]ரஷ்யாவில் மே தினம்
http://bits.wikimedia.org/skins-1.20wmf1/common/images/magnify-clip.png
முதல் மே நாளின் போது உருசியாவில் ஒட்டப்பட்ட சுவரொட்டி
சார் மன்னரின் ஆட்சியின் கீழ் ரஷ்யத் தொழிலாளிகள் பெரும் துன்பங்களுக்கு ஆளானார்கள். இங்கும் 1895 - 1899க்குஇடைப்பட்ட காலத்தில் நூற்றுக்கணக்கான வேலை நிறுத்தங்கள் நடைபெற்றன. 1896 ஏப்ரல் மாதத்தில் லெனின் மே தினத்திற்காக எழுதிய சிறு பிரசுரத்தில், ரஷ்யத் தொழிலாளிகளின் நிலைமை குறித்து விரிவாக அலசியதோடு, ரஷ்யத் தொழிலாளர்களின் பொருளாதார போராட்டம் - அரசியல் போராட்டமாக எழுச்சிக் கொள்ள வேண்டும் என்பதையும் வலியுறுத்தினர். தொழிலாளிகளின் 8 மணி நேர வேலைக்கான போராட்டங்களே ரஷ்யப் புரட்சிக்கு வித்திட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
[தொகு]அமெரிக்காவில்
அமெரிக்காவில் 1832இல் பொஸ்டனில் கப்பலில் பணியாற்றிய தச்சுத் தொழிலாளர்கள் 10 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து வேலை நிறுத்தம் செய்தனர். அதே போல், 1835இல் பிலடெல்பியாவிலும், பென்சில்வேனியாவிலும் இதே கோரிக்கையை முன்வைத்து இயக்கம் நடத்தப்பட்டது. பென்சில்வேனியாவில் நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்களும், இரயில்வே தொழிலாளர்களும் குறைவான வேலை நேரத்தை வலியுறுத்தி 1877இல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள தொழிலாளர் இயக்கங்களை இணைத்து அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்புஎன்ற இயக்கம் உருவாக்கப்பட்டது. இவ்வியக்கம் 8 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து தொடர்ந்து இயக்கங்களை நடத்தியது. அத்தோடு மே 1, 1886 அன்று நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்தது. இவ்வியக்கமே மே தினம் பிறப்பதற்கு காரணமாகவும் அமைந்தது.
தொழில் நகரங்களான நியூயார்க், சிகாகோ, பிலடெல்பியா, மில்விக்கி, சின்சினாட்டி, பால்டிமோர் என அமெரிக்கா முழுவதும் 3,50,000 தொழிலாளர்கள் பங்கேற்ற மாபெரும் வேலை நிறுத்தம் துவங்கியது. இவ்வேலை நிறுத்தத்தில் 1200க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் உள்ளதொழிலாளர்கள் பங்கெடுத்துக் கொண்டனர். தொழிலாளர்களின் எழுச்சிமிக்க வேலை நிறுத்தத்தினால், அமெரிக்க பெரு நிறுவனங்கள் மூடப்பட்டன. இரயில் போக்குவரத்து நடைபெறவில்லை. வேலை நிறுத்தத்தில் பங்கேற்ற தொழிலாளர் ஊர்வலங்கள் அமெரிக்காவை உலுக்கியது. மிச்சிகனில் மட்டும் 40,000 தொழிலாளர்களும், சிக்காகோவில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் கலந்துக் கொண்டனர்.
[தொகு]சிக்காகோ பேரெழுச்சி
மே 3, 1886 அன்று மெக்கார்மிக் ஹார் வஸ்டிங் மெஷின் நிறுவனத்தின்வாயிலில் 3000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அணி திரண்டு கண்டனக் கூட்டத்தை நடத்தினர். இங்கு இடம்பெற்ற கலவரத்தில் 4 தொழிலாளர்கள் காவற்துறையினரின் துப்பாக்கிச் சூட்டிற்குப் பலியாயினர். இச்சம்பவத்தை கண்டிக்கும் வகையில் ஹேமார்க்கெட் சதுக்கத்தில் மே 4 அன்று மாபெரும் கண்டன கூட்டம் ஒன்றை நடத்தினர் தொழிலாளர்கள். 2500 தொழிலாளர்கள் கலந்து கொண்ட கண்டனக் கூட்டம் அமைதியான முறையில் நடைபெற்றது. இந்நேரத்தில் காவல்துறையினர் அனைவரையும் கலைந்து செல்லுமாறு கூறினர். இவ்வேளையில் திடீரென்று கூட்டத்தில் வெடிகுண்டு வீசப்பட்டதில் அந்த இடத்திலேயே ஒரு காவல்துறையினர் பலியானார். பின்னர் போலீசார் கூட்டத்தினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தித் தொழிலாளரைத் தாக்கினர். அத்துடன் தொழிலாளர் தலைவர்களை கைது செய்து வழக்குத் தொடுத்தனர். இந்த வழக்கு ஜூன் 21, 1886 அன்று துவங்கியது. 7 பேருக்கு தூக்குத் தண்டனை வழங்கப்பட்டது.
[தொகு]அமெரிக்காவின் கறுப்பு தினம்
நவம்பர் 11, 1887 அன்று தொழிலாளர் தலைவர்கள் ஆகஸ்ட் ஸ்பைஸ், ஆல்பேர்ட் பார்சன்ஸ், அடொல்ஃப் ஃபிஷர், ஜோர்ஜ் ஏங்கல் ஆகியோர் ஆகியோர் தூக்கிலிடப்பட்டனர். நவம்பர் 13, 1887 அன்று நடைபெற்ற இறுதி ஊர்வலத்தில் அமெரிக்க தேசமே அணி திரண்டது. நாடு முழுவதும் 5 லட்சம் பேர் இவர்களது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டதோடு, அமெரிக்கா முழுவதும் கறுப்பு தினமாக அனுஷ்டிக்கப்பட்டது.
அமெரிக்க தொழிலாளர்களின் 8 மணி நேர வேலைக்கான போராட்டமும், சிகாகோ தியாகிகளின் தியாகமும்தான் இன்றைக்கு மே தினமாக - உழைப்பவர் தினமாக நம்முன் நிற்கிறது.
[தொகு]அனைத்து நாடுகளிலும் மே தினம்
1889 ஜூலை 14 அன்று பாரீசில் சோசலிசத் தொழிலாளர்களின் ‘’சர்வதேச தொழிலாளர் பாராளுமன்றம்’’ கூடியது. 18 நாடுகளில் இருந்து 400 பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். பிரெட்ரிக் ஏங்கெல்ஸ் உட்படப் பலர் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் கார்ல் மார்க்ஸ் வலியுறுத்திய 8 மணி நேர போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வது என்றும், சிக்காகோ சதியை இம்மாநாடு கடுமையாக கண்டித்ததோடு, 1890 மே 1 அன்று அனைத்துலக அளவில் தொழிலாளர்கள் இயக்கங்களை நடத்திட வேண்டும் என்றும் அறைகூவல் விடப்பட்டது.
இந்த அறைகூவலே மே முதல் நாளை, சர்வதேச தொழிலாளர் தினமாக, மே தினமாக அனுஷ்டிப்பதற்கு வழிவகுத்தது.
[தொகு]இந்தியாவில் மே தினம்
இந்தியாவில் சென்னை மாநகரில் தான் முதன்முதலில் தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டது. பொதுவுடைமைவாதியும் தலைசிறந்த சீர்திருத்தவாதியும் ம.சிங்காரவேலர் தான் 1923 -இல் சென்னை உயர்நீதிமன்றம் அருகே உள்ள கடற்கரையில் தொழிலாளர் தின விழாவைக் கொண்டாடினார்.

இரண்டாம் அனல் மின்நிலைய வாயில் முன்பு மே நாள் கொடியேற்றப்பட்டது.


01.05. 2012 அன்று இரண்டாம் அனல் மின்நிலைய வாயில் முன்பு நமது சங்க பொதுச்செயலாளர் தலைமையில் சுரங்கம்-1 பகுதி செயலாளர் நமது சங்க கொடியை ஏற்றிவைத்தார். இரண்டாம் அனல் மின்நிலைய அலுவலகப்பகுதி செயற்குழு உறுப்பினர் அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்.  

புரட்சிகர மே நாள் வாழ்த்துக்கள்


சங்க உறுப்பினர்களுக்கும் தொழிலாள தோழர்களுக்கும் புரட்சிகர மே நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
மே நாள் தியாகிகளுக்கு நமது செவ்வணக்கம்.
 பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கு அஞ்சாமல் அடக்குமுறைக்கெதிராகவும், ஊழலுக்கு எதிராகவும், தொழிலாளர்களின் உரிமைகள மீட்டெடுக்கவும் நமது போராட்டத்தை முன்னெடுத்துசெல்வோம்! வெற்றி பெறுவோம்! என மே நாளில் சூளுரைப்போம்.