நெய்வேலியில் பிப்ரவரி 20, 21 அகிலஇந்திய வேலைநிறுத்தத்தயாரிப்புக் கருத்தரங்கம்


12.02.2013 அன்று மாலை 7.00 மணியளவில் ஐ.என்.டி.யூ.சி வளாகத்தில்  விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவது, பொதுத்துறை பங்குவிற்பனையை கைவிடுவது, காண்ட்ராக்ட் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச்ச சம்பளம் ரூ.10,000 வழங்கவேண்டும், போனஸ், கிராஜிவிட்டி உச்சவரம்பை நீக்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி 20, 21 அகிலஇந்திய வேலைநிறுத்தத்தயாரிப்புக் கருத்தரங்கம் நடைபெற்றது. ஐ.என்.டி.யூ.சி தலைவர் சுந்தரமூர்த்தி தலைமைதாங்கினார். அனைத்து சங்க முதல்நிலை, இரண்டாம் நிலை தலைவர்கள் கருத்துரை வழங்கினர். தொ.மு.ச பொதுச்செயலாளர் ராசவன்னியன், அ.தொ.ஊ.ச, பா.தொ.ச சங்கங்களையும் வேலைநிறுத்தத்தில் பங்கேற்க அறைகூவல் விடுத்தார். மாநில தலைவர்களை அழைத்து 16.02.2013 அன்று மெயின்பஜாரில் வேலைநிறுத்த அறிவிப்பு பொதுக்கூட்டம் நடத்துவது என முடிவுசெய்யப்பட்டது. நமது சங்க தலைவர் தோழர். வேலு உரையாற்றுகையில், அரிதினும் அரிதாக பேச்சுவார்த்தை சங்கமான தொ.மு.சவும் வேலைநிறுத்தத்திற்கு தலைமையேற்பதால் இதைப் பயன்படுத்தி வேலைநிறுத்தத்தை வெற்றிபெறச்செய்யவேண்டுமென்று கேட்டுக்கொண்டார். ஏராளமான தொழிலாளர்கள் கருத்தரங்கில் கலந்துகொண்டனர்.