2013 பிப்ரவரி 20, 21 அகில இந்திய பொது வேலை நிறுத்த விளக்கப்பொதுக்கூட்டம்





2013 பிப்ரவரி 20, 21 அகில இந்திய பொது வேலை நிறுத்த விளக்கப்பொதுக்கூட்டம், நெய்வேலி மெயின்பஜாரில், 16.02.2013 அன்று மாலை 7.30 மணியளவில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தொ.மு.ச தலைவர் திரு. திருமாவளவன் தலைமைதாங்கினார். வேலை நிறுத்தத்தின் அவசியத்தை வலியுறுத்தி ஐ.என்.டி.யூ.சி.  மாநில செயலாளர் திரு. சுந்தரமூர்த்தி, ஏ.ஐ.யூ.டி.யூ.சி.  மாநில செயலாளர் திரு. சிவக்குமார், தொ.வி.மு.  ஒருங்கிணைப்பாளர் திரு. மருதமுத்து, ஹெச்.எம்.எஸ். மாநிலக்குழு உறுப்பினர். திரு. பாஸ்கரன், பி. எம்.எஸ். மாநில துணைத்தலைவர் திரு. அங்குசாமி, ஏ.ஐ.டி.யு.சி. மாநில பொதுச்செயலாளர் திரு. மூர்த்தி, சி.அய்.டி.யூ. மாநில பொதுச்செயலாளர் திரு.சுகுமாறன், தொ.மு.ச. பேரவை பொதுச்செயலாளர் திரு.சண்முகம் ஆகியோர் உரையாற்றினர். சி.ஐ.டி.யூ. பொதுச்செயலாளர் திரு.வேல்முருகன் நன்றி கூறி, பிப்-18, 19 தேதிகளில் ஆலை வாயிற்கூட்டங்களும், 19 மாலை வேலைநிறுத்த அறிவிப்புக்கூட்டமும் நடைபெறும் என அறிவித்தார்.. கூட்டத்தில் நமது சங்க தலைமை, பகுதி பொருப்பாளர்களும் கலந்து கொண்டனர். திரளான நிரந்தர, சொசைட்டி, ஒப்பந்த தொழிலாளர்களும் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.